அ.தி.மு.க., 'பூத் கமிட்டி'க்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில்,
முத்தரையர் சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது, அச்சமுதாய சங்கங்கள்
மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., சார்பில்,
தமிழக சட்டசபை தேர்தல் பணிக்காக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதிகளில் ஜாதி வாரியாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த
விவரங்களை சேகரிக்க, அ.தி.மு.க., தலைமை சார்பில் பூத் கமிட்டிக்கு
விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில், தொகுதிக்குழு,
பகுதிக்குழு ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய, நகர, பேரூராட்சி உறுப்பினர்கள்
பெயர், முகவரி, கட்சிப் பதவி, மொபைல் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட
வேண்டும்.
மேலும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பூத் கமிட்டியின் கட்டுப்பாட்டில் வரும் ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள், ஜாதி வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை சேகரித்து, அதில் குறிப்பிட வேண்டும். அதற்காக வன்னியர், நாயக்கர், கொங்கு வேளாளர், தேவர், பிராமணர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகள் வரிசையாக, விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் ஜாதியின் பெயர் குறிப்பிடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது, முத்தரையர் சமுதாய மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. - நமது நிருபர் -
News Source : தினமலர்
மேலும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பூத் கமிட்டியின் கட்டுப்பாட்டில் வரும் ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள், ஜாதி வாரியாக எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை சேகரித்து, அதில் குறிப்பிட வேண்டும். அதற்காக வன்னியர், நாயக்கர், கொங்கு வேளாளர், தேவர், பிராமணர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகள் வரிசையாக, விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆனால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் ஜாதியின் பெயர் குறிப்பிடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது, முத்தரையர் சமுதாய மக்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. - நமது நிருபர் -
News Source : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக