வெள்ளி, 25 மார்ச், 2016

கலப்பு மணம்...!

கலப்பு மணம்...!

(முத்தரையர்கள் கட்டாயம் படிக்கவும், பகிரவும், அனைத்து நம் வீட்டு பெண்களிடம் பிரிண்ட் எடுத்து கொடுக்கவும் வேண்டும்)

ஒரு விசயம் விவாதிக்கப்படாமல் மூடி மறைக்கும்வரை பெரும்பாலும் அது ஆபத்தாகவே அமைந்துவிடுகிறது, சமூக அவலமாகவும் ஆகி விடுகிறது, இந்த வாரத்தில் மட்டும் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் எனது கவனத்திற்க்கு வந்தது இரண்டும் சாதிமாறி காதல் கொண்டவை..!

சம்பவம் -  1

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலித் சமூகத்து மாணவனை காதலித்த பெண்ணை ஆணவகொலை செய்யப்போவதாகவும், அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று புரட்சியாளர்கள் எல்லாம் பொங்கி இருந்தார்கள் (https://www.facebook.com/manikandan.mapa/posts/173085043078125) அது என்னை பொருத்தவரை ஒரு செய்தி, அப்படியே நானும் கடந்து சென்றிருக்கலாம்

ஆனால் அந்த பதிவின் பின்னூட்டத்தில் இப்படி எழுதி இருந்தார்கள் // Anbu Selvaந் தோழர் திரு.தமிழ் இராசேந்திரன் அவர்கள் மூலம் அறிந்த செய்தி-

செய்தி பெருமளவு பரப்ப பட்டு விட்டது. மீடியாக்கள் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். காதலன் கொடுத்த புகார் பெறப்பட்டுவிட்டது. பெண்ணை தேடுதல் தொடங்கி உள்ளது. பெண் முத்தரையர் சாதி. பையன் எஸ்.சி. பெண்ணின் தந்தை கம்யூனிஸ்ட் என்பதே பெரும் ஆச்சரியம். //

இங்கு எங்கே சாதி வந்தது...? ஏன் "முத்தரையர்" சாதியாகவோ, எந்த சாதியாகவோ இருந்துவிட்டு போகட்டுமே..? காதலில் நீங்கள் ஏன் சாதி பார்கிறீர்கள்..? முத்தரையர் சமூகத்தின் வளர்ச்சிக்காக அமைப்பு நடத்தகூடியவர்கள் யாரேனும் இதனை எதிர்த்தார்களா..? இல்லையே...? பெண்ணின் குடும்பத்தார்கள் எதிர்த்தார்கள் அப்படிதானே..? முத்தரையர் என்ற பதம் பயன்படுத்துவதன் மூலம் அந்த சமூகத்தின் இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டி சாதி துவேசம் வளர்ப்பதுதான் இந்த புரட்சியாளர்களின் நோக்கமா..?   இது வழக்காகி காவல் நிலையம் சென்று அந்த பையனோடு செல்வேன் என்று அந்த பெண் சொல்லிவிட்டார், புரட்சியும் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது.

இதை படித்தவர்கள் இரண்டாவது சம்பவத்தை கட்டாயம் படிக்க வேண்டும்.

சம்பவம் - 2

தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த 19 வயது முத்தரையர் சமூகத்து மாணவியை காதலித்து அழைத்துக்கொண்டு செல்கிறார் ஒரு "தலித்" இளைஞர், இந்த வழக்கும் காவல் நிலையம் செல்கிறது, காவல்துறை அந்த இளைஞனோடு அந்த மாணவியை அனுப்பி வைக்கிறது. குடும்பத்தாரும் தலை முழுகி விட்டுவிடுகிறார்கள், நேற்று அந்த பெண்ணிடமிருந்து அவருடைய சகோதரருக்கு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, "அண்ணா..! என்னை அடித்து துண்புறுத்துகிறார்கள், கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள், என்னை எப்படியாவது காப்பாற்று" என்று அழுது புலம்புகிறாள், அந்த பெண் தன் சகோதரனோடு பேசியதை அறிந்த அந்த தலித் இளைஞர் பெண்ணின் சகோதரனை தொலைப்பேசியில் அழைத்து "உன் தங்கையை கொல்லதான் போகிறோம், என்னடா செய்வாய்..?" என்கிறார்.

இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்...?

புரட்சி பேசும் புண்ணாக்குக்களும், பெரியாரிசம் பேசும் பொறம்போக்குகளும், இந்த ஏழை வீட்டு பெண்ணுக்கு என்ன நீதியை சொல்லப்போகிறீர்கள்..?

 எனது இனமான உறவுகளே...! இந்த செய்தி நம் சமூகத்தின் அனைத்து பெண்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும், இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் நம் பெண்களை காப்பாற்றும் கடமை நமக்கு இருக்கிறது. புரியவையுங்கள் குடும்பத்தார் சம்மதத்தோடு, நல்ல வேலையில் இருக்கும் "எந்த" சாதியை சேர்ந்தவரையும் காதலித்து மணமுடித்துக் கொள்ளுங்கள், படிக்கும் வயதில் இனகவர்ச்சிக்காக உங்களை பலியிட்டுக்கொள்ளாதீர்கள், இன்று இந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி உங்களுக்கு நேர்ந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள் என்று சற்று சிந்தித்து பாருங்கள், நம் குடும்பம் மட்டும்தான் நமக்கு பாதுகாப்பு என்னதான் திட்டினாலும் அவர்கள் மட்டுமே உங்களை காப்பாற்றுவார்கள்.

இங்கு அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும், வெட்ட வேண்டும் என்ற வெட்டி பேச்சுக்கள் வேண்டாம், தவறு நேராமல் தன்னைதானே பாதுகாத்து கொள்ளும் பக்குவத்தை நம் சமூகம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள், படிக்க போகும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா பெண்களிடமும் எறிந்துவிழுவது, திட்டுவது, அனாவசியமாக அவர்களை குற்றப்படுத்துவது இவற்றை தவிர்த்து பக்குவமாக சமூகத்தை எப்படி அணுக வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்துங்கள், அது யாரேனும் ஒரு பெண் தவறாக போய்விடாமல் காப்பாற்ற உதவும்.

K. சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக