வெள்ளி, 1 டிசம்பர், 2017

மலையடிப்பட்டி சிவன் கோயில்


1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர்.

செல்லும் வழி மற்றும் வரைபடம்.... 

தஞ்சையிலிருந்தும், திருச்சியில் இருந்தும் பயணப்படலாம்...











கோயிலின் பெயர்-மலையடிப்பட்டி சிவன் கோயில்
வேறு பெயர்கள்-ஆலத்தூர் குடைவரைக் கோயில்
அமைவிடம்-சிவன் குடைவரைக்கோயில், மலையடிப்பட்டி-621 307, கீரனூர், புதுக்கோட்டை.
ஊர்-மலையடிப்பட்டி
வட்டம்-கீரனூர்
மாவட்டம்-புதுக்கோட்டை
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம்/வைணவம்/அம்மன்/முருகன் /கிராமதெய்வம்/சமணம்/பௌத்தம்/இதரவகை)-சைவம்
மூலவர் பெயர்-ஸ்ரீவாசீஸ்வரமுடையார்
காலம் / ஆட்சியாளர்-கி.பி. 9ஆம் நூற்றாண்டு / தந்தி வர்மன், விடேல் விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன்
கல்வெட்டு / செப்பேடு-பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள், பாண்டியர், சோழர் தமிழ்க் கல்வெட்டுகள், விஜயநகரர் கல்வெட்டுகள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
சுவரோவியங்கள்-இல்லை
சிற்பங்கள்-கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு-1100 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியினை ஆண்ட முத்தரையர்கள் இக்குடைவரையை எடுப்பித்தனர்.
சுருக்கம்-சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், சங்கரநாராயணர், கொற்றவை, சப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.




News Source : தமிழிணையம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக