பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2011,21:52 IST
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தவிர்க்கவும், இவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவும், மீனவர்கள் அதிகம் உள்ள முத்தரையர் சங்கத்தினர் தனி கட்சி துவங்க திட்டமிட்டுள்ளனர். முத்தரையர் சங்க மாநில இளைஞரணி தலைவர் பரதன் கூறியதாவது: எங்கள் சமூகத்தினர், 10 மாவட்டங்களில் அதிகமாக இருந்தும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளோம். வனத்துறையினரால் தொடர்ந்து மீனவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்; இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுவதும் தொடர்கிறது. மீனவர்களின் நலன் கருதி, தனி கட்சி துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரிய கட்சிகள் எங்களை அழைக்காவிடில், தேர்தலில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பரதன் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக