ஞாயிறு, 27 மார்ச், 2011

As per one of the DMK Candidate

தி.மு.க. வேட்பாளர் தங்கம்தென்னரசு வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். காரியாபட்டி நகரில் கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் ஆகிய ஆலயங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.

காரியாபட்டியில் உள்ள முக்குலத்தோர் உற வின்முறை, முத்தரையர் உறவின்முறை, வ.உ.சி. பேரவை, ரெட்டியார் உறவின்முறை, நாடார் உறவின்முறை, வீரசைவ பேரவை, மருத்துவர் சங்கம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்புலிகள் அமைப்பு, அருந்ததியர் அமைப்பு ஆகிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த வேட்பாளர் தங்கம் தென்னரசுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் போஸ், ஒன்றிய குழு தலைவர் சம்பத், ஒன்றிய செயலாளர் சண்முகசாமி, நகர செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் தேவர், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் மணி என்ற ராமநாதன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், முன்னாள் நகர செயலாளர்கள் தங்கபாண்டியன், போத்திராசு,

நகர இளைஞரணி அமைப்பாளர் ரபீக், அவைத்தலைவர் லியாகத்அலி, பஞ்சாயத்து தலைவர்கள் கண்ணன், சிவசக்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சந்தோசம், இனியவன், அச்சம்பட்டி தி.மு.க. பிரமுகர்கள் சரவணன், வீரணன், ராசு, செவல்பட்டி செல்வராஜ், அர்ச்சுணன், பட்டாணி, கிருஷ்ணசாமி, பாண்டியன் நகர் தி.மு.க. பிரமுகர்கள் உதயகுமார், சுப்பாராஜ், மெடிக் ராஜேந்திரன், மணி, செவல்பட்டி கருப்பையா, விடுதலை சிறுத்தை அமைப்பாளர் பாண்டியஅரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக