வெள்ளி, 25 மார்ச், 2011

முத்தரையர் சங்கபொதுக்குழு கூட்டம் - THANKS TO DINAMALAR

நாமக்கல்: நாமக்கல்லில், முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க மாவட்ட அமைப்புக் குழு தலைவர் கோபி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும், சங்க அனுமதியுடன் தேர்தல் பணி செய்யப்படும். கபிலர்மலை, ராசிபுரம், ப.வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில், மக்களுக்கு தொண்டு செய்யும் நல்ல வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்படும். தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு உதவும் வகையில் நல்ல திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக வசிக்கும் முத்திரை இன மக்கள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக