திருச்சி, : தமிழ்நாடு முத்தரையர் சங்க நிர்வாக குழு கூட்டம் புத்தூரில்
உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கர் தங்க வேல், பெரியகோபால், விசுவநாதன், சங்கர்,
மூர்த்தி, தீரன்முருகேசன், பால்ராஜ், உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர்.
சிவராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை சங்கம் ஆதரிப் பது, சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா, மார்ச் 16ம் தேதி நடத்து வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கவிஞர் லோகநாதன் நன்றி கூறினார்.
News Source : DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக