Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 4 அக்டோபர், 2012

இலங்கை சிறையில் உயிரிழந்த மீனவரின் உடல் திருச்சி வந்தது

இலங்கை சிறையில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடல் இன்று திருச்சி வந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்தரையர் நகரைச் சேர்ந்த மீனவர் தங்கராஜ் (64) என்பவரும், முனுசாமி என்பவரும், 2004ம் ஆண்டு இலங்கை கடல் எல்லையைத் தாண்டிய போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்த இலங்கை கடற்படை, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து.
இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 28ம் தேதி தங்கராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் இன்று ஸ்ரீலங்கன் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
அங்கு, தங்கராஜின் மகன் வெள்ளையன் உடலைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார்.

News From : DINAMANI

புதன், 3 அக்டோபர், 2012

முத்தரையர் சங்கம், மும்பை


சிக்கலெல்லாம் தீர்க்கும் சடைவுடை சிவலிங்கம்

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், தொன்மைக்கும் அழகுக்கும் கட்டிடக் கலைக்கும் இன்றும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரகதீஸ்வரர் ஆலயம் அமைவதற்கே முன்மாதிரியாக ஓர் ஆலயம் நம் தமிழ்நாட்டில் உள்ளது! ஆம், திருச்சென்னம் பூண்டியில் உள்ள சடையார் ஆலயம்தான் அது. காவிரி நதியின் வடகரையில் சுற்றிலும் பசுமையான தோப்புகள், தேக்கு மரங் கள், வயல் வெளிகள் என பசுமை போர்த்திய சூழலில் ஆலயம் அமைந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் தாங்கியபடி, ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல், சிதைவுப் போர்வையும் போர்த்தியிருக்கிறது. முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்கவர்மன், முத்தரையர் கோ.இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.

திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என வழங்கப்பட்ட இந்த ஆலயம், தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. ஆலயம் திறந்த வெளியில் அமைந்துள்ளது. மதில் சுவரோ, சுற்றிவர பிராகாரமோ எதுவும் கிடையாது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன், திருக்கடையுடைய மகாதே வர்; இறைவி, சித்தாம்பிகா. இறைவியின் ஆலயம் தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. இறைவிக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சங்கினையும் மேல் இடது கரத்தில் கதையையும் தாங்கி அருள்புரிகிறார். கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கின்றன. இறைவனின் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயம் மிகவும் சிதைந்துள்ளதால் இறைவனின் திருமேனியை இறைவியின் ஆலயத்திலேயே வைத்துள்ளனர்.
சிவலிங்கத் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.

சடைபோல சிக்கல் மிகுந்த பல பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதில் இந்த இறைவன் பேரருள் புரிகிறார். தேவக் கோட்டத்தில் வட திசையில் து ர்க்கையும் வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரரும் உள்ளனர். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. 21 கல்வெட்டுகளை தொல்பொருள்துறை கண்டுபி டித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். தொள்ளாற்றெறிந்த நந்தி வர்மன் மனைவி மாதேவியும் அவர்கள் மகளின் கணவர் அடிகள் கண்டன் மாறன் பாவை என்பவரும் இந்த ஆலயத்தில் ஏழு நாட்கள் திருவிழா நடைபெற பொன்னும் பொருளும் கொடுத்து உதவிய தகவலும் இங்கு காணமுடிகிறது. நவாப் மன்னர்கள் தென்நாட்டை ஆண்டபோது சிதைக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. 2 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலடி என்ற ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்திற்குச் செல்ல இந்த ஆலயத்திலிருந்து சுரங்கப் பாதை இருந்ததாம். ஆலயம் முழுவதும் கருங்கற்களாலேயே உருவாகியி ருக்கிறது.

சீதை இலங்கையில் சிறைபட்டிருந்தது, ராமாயணப்போர், அழகுப் பெண்களின் அற்புத நடனக் காட்சி, யாளி முதலான காட்சிகள் இறைவன் ஆலயத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. கலை ஆர்வமிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் தஞ்சை பெரிய கோயில், திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம் என இரண்டையும் பார்த்துவிட்டு இந்த ஆலயத்தையும் கண்டுகளித்து மெய் சிலிர்க்கின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணை-திருவையாறு வழித்தடத்தில் உள்ள கோவிலடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பேருந்து இல்லை; ஆட்டோ வசதி மட்டுமே உண்டு.

ஆலயத்தொடர்புக்கு: 8903442814 ஜெயவண்ணன்

News From : DINAKARAN

திங்கள், 1 அக்டோபர், 2012

முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07

படம் : V.P.ராஜன்
 


முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07
 
இரண்டாவது வருடமும் இதோ முடியப் போகிறது, இதுவரை யார் உண்மை குற்றவாளி என்று எமக்கு தெரியவில்லை, விசாரணை நடத்தப் படுகிறதா ? என்றும் தெரியவில்லை, யாருக்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்தாரோ அந்த மக்களும் மறந்துப் போனார்கள், யாருக்காக தன் மூச்சு நிற்க்கும் வரை விசுவாசமாக இருந்தாரோ அவர்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தும், இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்று அறிந்துக் கொள்ளும் சாதாரணமான ஆர்வம் கூட இல்லை, இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி யோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்தும் அது பற்றிய அக்கறையோ, ஆர்வமோ அரசாங்கத்திற்க்கு இல்லாமல் போய்விட்டது, படுகொலை நடந்த அடுத்த 15 தினங்கள் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தினை ஸ்தம்பிக்க வைத்த முத்தரையர்கள் பின்னர் ஏனோ இதனை மறந்து போனார்கள், முத்தரையர் இனத்தின் வளர்ச்சியை தடுக்க நினைத்து இந்த மாபாதகத்தை செய்த பதருகளே, ஒன்றை மாத்திரம் மனதில் கொள்ளுங்கள், வீழ்வதும், எழுவதும் எமக்கு புதிதல்ல எம்மை நிரந்தரமாக வீழ்த்திவிட்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்..!! யாம் எழும் நாள் தொலைவில் இல்லை இந்த நேரத்திலும் நாம் தமிழக அரசினையும்/ தமிழக முதல்வரையும் வேண்டுகிறோம், உங்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும்,உங்களால் அமைச்சராக்கியும், மாநில அமப்புச் செயலாளராகவும் அழகு பார்க்கப் பட்டவர், முத்தரையர் இனத்தின் பாதுகாவலனாக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் இரண்டு ஆகின்றது, உங்கள் மேல் இத்தனை மரியாதையையும், பாசத்தையும் வைத்தவர் யாரால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் தானே அறிந்து கொள்ள வேண்டும் ? உங்களுக்காக தானே உழைத்தார் ? இனியும் தாமதிக்காமல் இப்பொழுதாவது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதுதான் அவரால் உங்களுக்கு ஆதரவாளரார்களாக மாற்றப்பட்ட முத்தரையர்களுக்கு நீங்கள் செய்யும் பிரதிகரமாக இருக்கும், முத்தரைய பெருமக்களே...!! நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் நம்மை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டே இருக்க போகிறோம்.. ? நமக்கான அரசியல் என்ன ? நம் இனத்தவர்களுக்கு ஏன் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன ? ஊருக்கு ஊர் வெட்டிப் பெருமை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பேசப் போகிறோம் ? ஒருபக்கம் இளைய தலைமுறை குடிப் பழக்கத்திற்க்கு அடிமையாக்கப் படுகிறது, மறு பக்கம் நமக்கான அரசியலை ஏற்று நடத்த சரியான தலைமை இல்லை, இன்னும் சொல்லப் போனால் வருகின்ற தலைமைகள் கூட தங்களின் சுய லாபத்திற்காக நம்மை மற்றவர்களிடம் அடகு வைத்துவிடுகிறது, இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன ? நாம் தெளிவடைவது எப்போது ? அக்டோபர் 7 ந் தேதியுடன் ஆண்டுகள் இரண்டு ஆகிறது, நம்முடைய மாவீரன் நம்மை விட்டு சென்று முத்தரையர் இனமே.. !! உனக்காக உழைத்திட்ட, உன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் பாதுகாக்க மறந்த மாவீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உங்களை வேண்டுகிறோம், அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்..!! என்பதை நாம் அறியாததல்ல...
மாவீரனே...! உன்னை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.. ! உன்னை எங்களிடமிருந்து  பிரித்தவர்களை மன்னிக்கவும் மாட்டோம் என்றும் உன் வழியில் ........
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
 
 

 

சனி, 29 செப்டம்பர், 2012

முத்தரயர்களுக்கான அரசியல்...


100 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றால் தமிழக வரலாற்றிலே முழு அரசியல் அதிகாரமும் பார்பனர்களிடதிலே இருந்தது...அதன் பிறகு பெரியார் போன்ற சில தலைவர்களின் போராட்டத்தாலும் முயற்சியாலும் அந்த நிலை மாறி 1920 க்குபிறகு பார்பனர் விரட்டப்பட்டு பார்பனர் அல்லாதோர் அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர்...இது நம் அனைவருக்கும் தெரிந்ததே...இதில் நீதிக் கட்சி போன்ற சில அரசியல் கட்சிகளின் பங்குதான் அதிகம் இருந்தது,அனால் இதை பார்பனர் அல்லாதோர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக நாம் கருத முடியாது,ஏனெனில் பார்பனர் விரட்டப்பட்டு அந்த இடத்திலே அமர்ந்தவர்கள் யாரென்று பார்த்தால் தாழ்த்தபட்ட மக்களோ,தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களோ அல்ல...அவர்கள் அனைவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள்...அதாவது நாய்டு,நாயக்கர்,ரெட்டியார்,முதலியார் போன்ற மக்கள் தொகையிலே சிறுபான்மையினதவராக இருந்த தெலுங்கர்களே...இதைவுறுதிபடுத்த வேண்டும் என்றல் நீதிக்கட்சி முதலில் ஆட்சி அமைத்த போது அதன் அமைச்சரவையிலே ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை...இதை அப்போது ஒரு பத்திரிக்கை பார்பனர் அல்லாத தெலுங்கு மக்களின் அமைச்சரவை என்று விமர்சித்ததாக ஒரு முனைவர் எழுதி வுள்ளார்...இதனால் முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,முத்தரையர் போன்ற தமிழ் சாதிகள் அரசியலில் ஈடுபடாமலே இருந்துள்ளது...

ஆனால் இதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் மேற்கண்ட தமிழ் சாதிகள் தங்களை அரசியலில் மிக விரைவாக ஈடுபடுத்தி கொண்டுள்ளன-நம்மை தவிர,காரணம் அந்த காலங்களில் நமக்கு பள்ளிக்கூடமே தெரியாமல் இருந்துள்ளோம்,ஆதாரம் சட்டநாதன் அறிக்கை 1974 -அதாவது 1920 வரை பார்பனரும்,அதன் பிறகு தெலுங்கரும்,1950 க்கு பிறகுதமிழ் சாதிகளிடையே போட்டி ஏற்படுகிறது...இதில் முதலில் வென்றவர்கள் வன்னியர்கள்...50 களிலே அவர்கள் உழைப்பாளர் கட்சி, உழைப்பாளர் பொதுநலக் கட்சி,என்று அந்த சமுதயதவர்களை அரசியல் ரீதியாக தயார் செய்து 25 சட்டமன்ற உறுப்பினர் வரை உருவாக்கினார்கள், அதன் பிறகும் திராவிடப் போர்வையில் தெலுங்கர்களில்ஆட்சி தொடர்ந்தது இருந்தாலும் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை...குறிப்பாக முக்குலத்தோர் என்று சொல்லி கொண்டு ஒரு கும்பல் அரசியலை தன் வசப்படுத்தியது...எல்ல சாதிகளும் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்ப முயற்சிக்க இவர்கள் மட்டும் அதை விட அதிகமாக அனுப்பினர்...இதற்கு உதவியது அவர்களின் ஒற்றுமை,வீர வரலாறு படைத்தோர் என அந்த சமுதாய மக்கள் தங்களை நம்பியது...ஆனால் சில சாதிகள் எதுவுமே தெரியாமல் தமக்குள்ள தலைவர்களை உருவாக்காமல், தாமாக உருவாகினால் அவர்களை வளரவிடாமல் செய்தனர்,செய்துவருகின்றனர்...மேலும் சானார் என்று ஒடுக்கப்பட்டவர்கள் தான் இன்றைக்கு நாடார் ஆகி அரசியல் செய்கின்றனர்...

இப்பொழுது நாம் ஒரு விசயத்திற்கு வருவோம்...நமது மக்கள் தொகை எவ்வளவு? நமக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட சாதி எது?வன்னியர்...அவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சியையும் சேர்த்து சட்டமன்றத்திலே எத்தனை இடம் ? நமக்கு எத்தனை ? நாம் கேட்பதெல்லாம் சாதி அரசியல் பேசக்கூடாது என்று சொல்பவர்கள் உங்கள் தொகுதியில் ஒரே ஒருமுறை சாதி இல்லாமல் முத்தரையர்களை வேட்பாளர் என்று அனைத்து சாதியினரும் ஏற்று கொள்ளுங்கள் என்று மாற்று இனத்தவரிடம் சொல்ல முடியுமா? குறிப்பாக முக்குலத்தோரிடம் சொல்லி தொகுதியை பெற முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்...

ஆ.வெங்கடாசலம் என்ற தலைவனை வெட்டி கொன்றார்களே...ஒரு முக்குலதவனயோ,வன்னியனயோ கொன்றிருந்தால் அந்த கட்சி சும்மா இருந்திருக்குமா? இல்லை அந்த சமூகம்தான் சும்மா விட்டிருக்குமா? ஆனால் நாமோ அவருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாட தயாராகி வருகின்றோம்...ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவரது சாவின் உண்மை காரணம் தெரியும்? தெரிந்தவர்களும் சும்மா தானே இருக்கின்றோம்...என்றாவது சிந்தித்து உண்டா? சாதியின் பெயரை சொன்னாலே ஏதோ சொல்ல கூடததை சொன்னதை போன்று பார்க்கின்றோம் எப்படி இந்த சாதி முன்னேறும்? நம் சமுக இளைஞர்களால் ஒரு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ,முக்குலத்தவர்க்கும் நிகராக அரசியல் பேச முடியுமா?இந்தநிலை எப்பொழுது மாறுகிறதோ அப்போதுதான் சமுதாயம் முன்னேறும்...
 
- துரை ராஜகுமாரன்
 

முத்தரையர் சதயவிழாவின் ஒரு பகுதி


நன்றி : அசோக் ஜி

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

வருந்துகிறோம்...!!!

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறது, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
 
 


வியாழன், 20 செப்டம்பர், 2012

உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?

நம் சமுகம் மக்கள் தொகையல் அதிகமாகவும்,

அரசியல் மற்றும் பொருளாதார நிலையில்.அதிகம் தாக்கம் இல்லாமல் உள்ளோம்.தற்போது உள்ள அரசியல் கட்சிகளில் நமக்கு உள்ள செல்வாக்கு நாம் அறிந்ததே.
இந்த நிலையேல் தமிழகத்தில் செல்வாக்கு அதிகம் இல்லாத இந்து மத அமைப்பினர், தங்கள் அரசியல் வளர்சிக்கு.அதிக வாக்கு வங்கிகளை உடைய நம்மை குறிவைகிறார்கள்.இதற்காக ஒரு சில மாவட்ட பொறுப்புகளை நம் இனத்தவர்களுக்கு கொடுத்து நம்மை தன் வசபடுத்துகிறார்கள்.அதிகம் உணர்ச்சி களுக்கு தகுந்து, சிந்திக்காமல் முடிவு எடுக்கும் நாம் பல மதரீதியான பிரச்சனைகளில் மாட்டவைகபடுகிறோம்..

நாம் சிந்திக்கவேண்டிய பல வினாக்கள் நம் முன் உள்ளது.
 

1) நமக்கு உண்மையேல் எதிரி யார்? முஸ்லிமா,கிறிஸ்தவர்களா ?
 
 
 
 

2 ) அப்படி அவர்கள் தான் காரணம் எனில். எனில் நாம் இத்தனை ஆண்டுகளாக அணைத்து துறைகளிலும் பின் தங்கி ஒடுக்கப்பட்டு வாழ்வதற்கு காரணம் யார்?
 

3) நம் வளர்ச்சில் இந்த அமைபினற்கு உண்மையான கரிசனம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
 

4) உள்ளூரில் சக இந்து (சாதி அமைப்புகளிடம்)அரசியல்,பொருளாதார நிலமையல் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாத நம்மால், இந்த மிகப்பெரிய அமைப்பு ரீதியான இவர்களிடம் வெற்றி பெறுவது எளிது என்று நம்புகிறீர்களா?

நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948)


5) நாம் சீரும் சிறப்பாக வாழ்ந்த நம் மன்னர்களின் காலத்தை, இருண்ட காலம் என்று ஒற்றை வரியல் சொல்லி.நம் இனத்தையே கல்வி அறிவு இல்லாமல் பல நூற்றாண்டுகள் விவசாய கூலிகளாக மாற்றிய இவர்களிடம், நாம் உண்மையான கரிசனத்தை எதிர்பார்க்க முடியுமா?

..நமக்கு எதிரி நம் அறியாமை தான்...மற்ற இனத்தவர்கள் அல்ல? .சிந்திப்போம். சிந்திப்போம், உண்மையான சுய சிந்தனையுடன்,கல்வி அறிவுடன் பொருளாதார அரசியல் வளர்ச்சியை அடைவோம்...நல்ல மரியாதையைஇகு உரிய இந்துவாக வாழும் வாய்பு கிடைக்குமா, அதற்கு மத்த சாதி அமைப்பிலிருந்து உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்று முதலில் போராடுவோம்.
வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.
இப்படிக்கு முத்தரையர் ஷேரிங் குரூப் நண்பர்கள் அமைப்பு
 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

முத்தரையர் இனப் பெண்கள்...!!

முத்தரையர் இனப் பெண்கள்...!!

முத்தரையர் சமுதாயம் இன்று பெருமைப் படக்கூடிய ஒரே விசயம் நம் சமுகப் பெண்களின் கல்வி அறிவு, மற்ற சமுகங்களைக் காட்டிலும், நமது சமுகத்தின் ஆண்களைக் காட்டிலும் கல்வி அறிவில் நமது பெண்கள் மிகப் பெரிய அளவில் சாதித்துள்ளார்கள்/ சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்வேறு சமுக, பொருளாதர காரணங்களால் ஆண்பிள்ளைகளால் சாதிக்க முடியாத விசயத்தில், பெண்களின் இந்த சாதனையை மேலும் நாம் ஊக்கப் படுத்த வேண்டும், நமது சகோதரிகளுக்கு சரியான வழிக்காட்டுதலும், தொடர்ந்து படிக்க ஊக்கமும் தர வேண்டும் அது நாளைய நமது சமுகத்தின் வெற்றிக்கு பெறும் உதவியாக இருக்கும், நான் அறிந்து பெரும்பாலான நம் சகோதரிகள் நிரம்ப படித்தும் சரியான வழிக்காட்டுதல் இல்லாமல், இரத்த உறவுகள் யாரும் தாம் தேர்ந்தெடுத்த துறையில் இல்லாததலும் வேலைக்கு செல்ல முடியாமல் / பணி வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருக்குக்கின்றார்கள், இவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பினை எவ்வாறு பெற்றுத்தர முடியும் ? இது குறித்த உங்களின் ஆலோசனை என்ன ? அரசு வேலை என்றால் பாதுகாப்பு பிரச்சனைகள் கிடையாத...
ு, பணி நேரமும் குறைவு ஆனால் அது நமக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. அதற்க்காக அவர்கள் கற்ற கல்வி வீணாகவும் கூடாது, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் அவர்களின் கல்வி நிலைக்கு ஏற்ப உரிய வேலை வாய்ப்பினை பெற்றுத்தர என்ன வழி ? நமது சகோதரர்கள் இவர்களுக்கு உதவ அல்லது இவர்களின் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை பற்றி அறிவிக்க என்ன வழி ? இது நமது இனதின் ஏதிர்கால பிரச்சனை இது குறித்து நாம் விவாதிப்போமா ?

உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி....



சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,

ஒருங்கிணைப்பாளர்,

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
 
Write to : sanjai28582@gmail.com
 

உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?

உறவுகளுக்கு வணக்கம் !



உணர்ச்சி வசப்படும் இனமா முத்தரையர் சமுதாயம் ?
...



கடந்த காலங்களில் நடந்த சில கசப்பான சம்பவங்களில், ஏனோ முத்தரையர் இனம் குறிவைக்கப்படுகிறதோ என்ற சந்தேகதினை வலுப்படுத்துவது போல உள்ளது, தஞ்சாவூர் மாவட்டதில் ஒரு கிராமம், முத்தரையர்கள் மட்டுமே வாழும் அந்த கிராமத்தினருக்கும், அருகில் உள்ள இஸ்லாமியர் நிறைந்து வாழும் ஒரு ஊருக்கும் ஒரு மத மோதல் உருவானது, நம்மவர்களின் நியாயமான கோரிக்கைதான் என்றாலும், அதற்கான போரட்டமுறை தவறாக வடித்தெடுக்கப்பட்டது என்பதுதான் வேதனை இதன் பிண்ணனியில் இருந்து நம் மக்களை தவறாக வழிநடத்தியது இந்து அமைப்புகள் இதில் பாதிக்கப்பட்டது என்னவோ முத்தரையர்கள்தான், இதே நிலைதான் மதுரை மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து வரும் நம் மக்களை தூண்டிவிடும் விதமாக நமது மன்னரின் படத்தினை சிலர் அவமதிக்க அதை காரணமாக கொண்டு சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்தது, இதே போன்று திண்டுக்கல் மாவட்டதில் நமது சிங்க கொடி சிலரால் திட்டமிட்டு அவமதிக்கப்பட அங்கும் சில விரும்பதகாத சம்பவங்கள், கருர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில், திருச்சியில் முத்தரையர் பிறந்த நாள் விழவில், ராமநாதபுரம் முத்தரையர் சிலை திறப்புவிழாவில் இவ்வாறு விறும்பதகாத சம்பவங்கள் நடைப்பெறும் பொழுதெல்லாம் கடைசில் பாதிக்கப்படுவது நமது இனமாகவே இருக்கின்றது. இதில் நம்மை உணர்ச்சி வசப்படுத்தி ஆதாயம் பெறுகிறார்கள் சிலர். இதனை நாம் எவ்வாறு களைவது என்பதனைக் குறித்து நாம் சிந்திக்கவேண்டும், இந்த தருணத்தில் மேலும் ஒரு முக்கியமான விசயம், இங்கே சில நண்பர்களிடம் ஒரு தவறான எண்ணம் உள்ளது, என்ன நடந்தாலும் பிறரை குறை சொல்வது, நாம் கேட்பது இதற்க்கான தீர்வு என்ன என்பது மட்டும் தான், பிறரை குறை கூறுவதன் மூலம் தான் எதோ பெரிதாக சாதித்து விட்டதாக சில நண்பர்கள் நினைக்கிறரார்கள், தவறு தனி மனிதனால் எல்லா விசயங்களும் சாதிக்க முடியும் என்றால் நாமும் எப்போது வெற்றி பெற்றிருக்க முடியும், ஆகையால் எது நல்ல தீர்வு என்பதும், அதனை எவ்வாறு நாம் நடைமுறை படுத்துவது என்பது குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும், முன்பு இதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நமது சமுகத்தவர் ஒரு இஸ்லாமிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதற்க்கான காரணம் என்ன ? அதை தடுக்க நமது சமுக சங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன ? வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம்.



உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கி....



சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,

புதன், 12 செப்டம்பர், 2012

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் முத்தரையர் சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்: மாநில துணைத்தலைவர்

திருச்சி, செப். 12-
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் விழாவில் முத்தரையர் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் மங்களா ப.செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மலைக்கோட்டை மாநகர் ஸ்ரீரங்கத்தில் மக்கள் நலப்பணி திட்டங்களையும், ரெங்கநாதர் கோவில் தினசரி நாள் முழுவதும் அன்னதான திட்டத்தையும் தொடங்கி வைக்க நாளை (13-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகை தருகிறார். முத்தரைய மக்களின் வரலாற்று மன்னர் பெரும் பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாநகரில் சிலை அமைத்து தந்து மாவட்டத்திற்கும் மன்னரின் பெயர் சூட்டி பல்வேறு பிரிவுகளாக 29 பட்டப்பெயர்களில் வாழ்ந்த முத்தரைய சமுதாயத்தை ஒரே பட்டப்பெயராக முத்தரையர் என்று அழைத்திட உத்தரவு வழங்கி நம் சமுதாயத்தை பெருமைப்படுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இந்த நல்ல நாளில் நன்றி மறவாமல் வரவேற்போம்.
முத்தரைய சமுதாய மக்கள் அமைதியாய் கண்ணியத்துடன் பெரும் திரளாக வந்து கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு மங்களா செல்லத்துரை அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
NEWS FROM MALAIMALAR

திங்கள், 10 செப்டம்பர், 2012

முத்தரையர் வரலாறு ...??


வரலாற்றின் அவசியம் நம் அனைவருக்கும் தெரிந்ததே...வரலாறு தெரியாதவன் வாழ்வதற்கே தகுதி யற்றவன்...ஒவ்வொரு மனிதனும் தம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தகுதி வுடயவர்கள் முயற்சிக்க வேண்டும் அதாவது எழுத்தாற்றல் படைத்தோர் புத்தகமாக எழுதவேண்டும்,பேச்சாற்றல் படைத்தோர் அவர்களது பணியை அவர்கள் வழியில் செயல்படவேண்டும்,ஆனால் அது போன்று நம் சமுகத்தின் வரலாற்றை எழுதவோ பேசவோ தேவையான அளவு நம்மவர்கள் முயற்சி எடுக்கவில்லை...நம்மில் பெரும்பாலனோர் முத்தரயர்களின் ஆட்சி ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே துவங்கியதாக நினைதுகொண்டிருகின்றோம் அனால் களப்பிரர் தமிழ் மண்ணில் கால் வைத்த போதே முத்தரயர்களின் தமிழ் வரலாறு துவங்கிவிட்டது அதை மயிலை சீனி வேங்கடச்வாமி என்ற ஒரு வன்னியரை தவிர வரலாறாக பதிவு செய்ய யாரும் முன்வரவில்லை...குறைந்தபட்சம் களப்பிரர் முத்தரையர் என்பதலேணும் நாம் எழுத முற்பட்டிருக்க வேண்டும்...அண்மையில் நான் குற்ற பரம்பரை அரசியல் என்ற நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது,அது முழுக்க முழுக்க கள்ளறுககவே எழுத பட்டுள்ளது,அதை எழுதிய முகில்நிலவன் என்ற தேவர் ஒவ்வொரு வரியிலும...
் வுனற்சிகளை கொட்டியுள்ளார் ,அவரது ஆதங்கம் கள்ளர்களை நல்லவர்களாக காட்ட வேண்டும் YENPATHE.அது போன்று அர்பணிப்பு வுனர்வோடு நம் வரலாற்றை எழுத யாரும் இல்லை,காலம் கடந்து விட்டது...இருந்தாலும் நம் முன்னோர் நமக்கு கொடுக்காத வாய்ப்பை நாம் ஏன் நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க கூடது..NAAMMUTAYA க்ரூபில் அதற்கான தகுதிபடைத்த பலர் இருகின்றிர்கள்...நீங்கள் கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.மேலும் வுன்களுக்கு தெரிந்த செய்திகளை முழுவதுமாக எங்களுக்கு(YILANYARKALUKU)தெரியபடுத்துங்கள்..நாங்களும் பின்னலில் அதற்கான முயற்சியெடுக்க அவைவுதவும்...நம் இனத்தில் திறமை வுடையோர் சுயநலத்தோடு இருகின்றனர்...சுயநலமற்ற நாமேனும் அதற்கான முயற்சியில் இறங்குவோம்...சாதி அழிய வேண்டியது,,,ஆனால் அது இந்த மண்ணை விட்டு கண்டிப்பாக அவ்வளவு சாதரணமாக அழிந்து விடாது,கால மாறுதலுக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுக்குமே தவிர அழியாது.மேலும் சாதி அடிப்படையில் நாம் பலவற்றை இழந்து வருகின்றோம்...இது தெரியாதவர்கள்தான் சாதி இல்லை என்று சொல்லி வருகின்றனர்...அரசியல் துவங்கி அனைத்திலும் சாதிதான் அரசோச்சி வருகின்றது.,.
 
-துரை ராஜகுமாரன் 

கருத்து எடுக்கப்பட்டது : முத்துராஜா ஷேரிங் க்ரூபில் இருந்து

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சி.பி.சிற்றரசு பற்றி கவியரசர் கண்ணதாசன் தான் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகத்தில்....

சி.பி.சிற்றரசு பற்றி கவியரசர் கண்ணதாசன் தான் எழுதிய "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகத்தில்....
 

 

வேலை வாய்ப்புத் தகவல்


வெள்ளி, 7 செப்டம்பர், 2012

கூனி மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

மண்டபம், : மண்டபம் அம்பலகாரத்தெரு கூனி மாரியம்மன் கோயில் 166ம் ஆண்டு முளைப்பாரி விழா ஆக.28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
இதை முன்னிட்டு தின மும் இரவு செந்திவேல் தலமையில் வாலிபர்களின் ஒயிலாட்டம் நடந்தது. கட ந்த 4ம் தேதி இரவு அம்மன் கரகம் தென் கடற்கரையி லிருந்து ஊர்வலமாக கோ யிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதி உலா சென்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், ஆடுகள் பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று மாலை அம்மன் கரகத்துடன் முளைப்பாரி சுமந்து ஊர்வலம் சென்ற பெண்கள் பாரிகளை கடலில் கரைத்தனர். இரவு கிராமிய தெம்மாங்கு கலைநிகழ்ச்சி நடந்தது.
ஏள்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், பூசாரி குமார், கவுன்சிலர் முனியசாமி, தண்டல் முருகானந்தம், ராஜேந்திரன், ஷாபு ராஜேந்திரன், நம்புவேல் மற்றும் முத்தரையர் இளைஞரணியினர் செய்திருந்தனர். வருகிற 11ம் தேதி குளுமை பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது.

NEWS FROM : DINAKARAN

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

"சிந்தனை சிற்பி" இரண்டாம் மறு பதிப்பு


சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். கா
ஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
-திருமேனி


சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
திரு சி.பி சிற்றரசு , குறித்த விவரங்கள் விளக்கமாக சில காலங்களக்கு முன்னர் நமது குழுமத்தில் பதிவிட்டிருந்தோம் ,அப்போது நண்பர்கள் அவர் நாயுடு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சந்தேகங்களும் எழுப்பப்பட்டது அப்போது நமது நண்பர் திரு மணிமாறன் போன்றோர் அவர் முத்தரையர் தான் முத்தரையர் சங்க நிறுவுனர் திரு வேங்கட சாமி அவர்களும் நாயுடு என்றே கூறப்பட்டார் என்பதை சுட்டி காட்டி பதிவிட்டிருந்தோம் .நிற்க தற்போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது ,மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு அனுப்ப பட்டிருந்தது அதில் அவரை பற்றிய தகவல்கள் அவரின் அரசியல் பற்றியவையும் இருந்தது ,கருணாநிதிக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அதிமுகவுக்கு சென்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அதோடு அக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது .திரு .சி .பி சிற்றரசு பெயர் வேலூர் மாவட்ட ஆட்சியாளார் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடபட்டிருந்தது .
சி.பி .சிற்றரசு மாளிகை வேலூர் - இது தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலுகம் ,பாலாற்றங்கரை ஒட்டி சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது ,இந்த அலுவலகத்தை ஒட்டி முத்தரையர் இன மக்கள் மற்றும் முதலியார் இன மக்களும் தலித்துகளும் வாழும் பகுதி ,இது மூன்றாம் நிலை நகராட்சியாக சென்ற திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு முத்தரையர் இனத்தை சார்ந்த திருமதி ,ஆர்.பி, ஜெயலக்ஷ்மி ஏழுமலை ,முதல் மற்றும் கடைசி நகராட்சி தலைவர் .இப்போது இது வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது .திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் மகன் திரு ,சசிகுமார் அவர்கள் மாமன்ற உறுபினராக வெற்றி பெற்று வெற்றிகரமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார் ,இவரது தந்தை திரு ,ஆர் .பி ஏழுமலை அவர்கள் திமுக ஒன்றிய செயலாளராக நீண்ட காலமாக இறுந்து வருகிறார் ,வேலூர் அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தி ,நம் மக்களக்கு முடிந்த அளவுக்கு சென்ற ஆட்சி காலத்தில் அனைத்து உதவிகளும் புரிந்தார் ,அனைத்து நல திட்டங்கள் ,இலவசங்கள் என அனைத்தும் தாராளமாக கிடைத்தது .இவரது மைத்துனர் திரு சக்கரவர்த்தி திமுக நகர செயலாளர் .
அதில் ஒரு உண்மை மறுக்கப்பட்டிருக்கிறது ,தெரிய வில்லையா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று தெரிய வில்லை ,அது வேலூர் ஆட்சியர் அலுவலகம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது ,அந்த மாளிகைக்கு சி ,பி சிற்றரசு மாளிகை என்று பெயர் சூடியவரும் அவர்தான் ,அதை திறந்து வைத்தவரும் அவர்தான் என்பதை நமது நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்
உண்மையில் இங்கு வாழும் நமது இனத்து மக்களக்கு பெரும்பான்மையோருக்கு அவர் முத்தரையர் என்று தெரியாது ,எனக்கும் கூட மணிமாறன் அவர்கள் கூறிய போதுதான் தெரியும் .அதேபோல் திரு முத்தையா முரளிதரன் அவர்கள் நம்மவர் என்றும் கூறியதால் நமது இணைய தளத்திலும் போட்டிருக்கிறோம் ,ஆனால் சமிபத்தில் வேறு ஒரு இனத்தின் இணையதளம் ஒன்றை பார்க்க நேரிட்டது அதில் அவர்களும் முத்தையா முரள்தரன் அவர்களின் இனத்தை சார்ந்தவர் என்று பதிவிட்டிருக்கிரார்கள் ,நாமக்கல் நண்பரும் இதையே தான் என்னிடத்தில் கேட்டார் காரணம் முரள்தரனின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவர் நன்றாக தெரியும் என்றும் கூறினார் .காரணம் ஒரு நாயடு நண்பர் ஒருவர் சிற்றரசு எங்களவர் என்று என்னிடம் கூறினார் ,ஆக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது .
 
சில தினங்களுக்கு முன்பு இந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம் இது தொடர்பாக மேலும் சில புகைப்படங்கள் முத்தரையர் (முத்துராஜா) ஷேரிங் க்ரூப்பில் திரு. திருமேனி அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள் அது உங்களுக்காக....

 

திங்கள், 3 செப்டம்பர், 2012

குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருச்சி, செப். 1: திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் வழிப்பறி, நகைப் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸôர், கொள்ளையர்களை பிடிப்பதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் மரு. பாஸ்கரன் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலர் பெரியகோபால், ஒன்றியச் செயலர் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபரில் மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

NEWS FROM DINAMANI

ஆகாயத்தாமரைகளை அகற்ற முத்தரையர் சங்கம் கோரிக்கை


திருச்சி: "திருச்சி உய்யக்கொ ண்டான் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்றவேண்டும்' என, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. பொதுச்செயலாளரும், மாவட்டத் தலைவருமான மரு.பாஸ்கரன் தலைமை வகித்தார். இளைஞரணிச் செயலாளர் பெரியகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலி ல் நித்ய அன்னதான திட்டத்தை அறிவித்து, அதை துவக்கி வைக் க வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை சங்கம் சார்பில் குடு ம்பத்துடன் வரவேற்கவேண்டும். கல்வி வேலைவாய்ப்புகளில் பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையருக்கு பத்து சதவீதமும், எம்.பி.சி., பட்டியலில் உள்ள முத்தரையருக்கு ஐந்து சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டா ண்ட்டுக்கு அண்ணாமலை முத்துராஜா பஸ்ஸ்டாண்ட் என்று பெயர் சூட்டிட திருச்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. இன்றுவரை பெயர் சூட்டிட மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பெயர் சூட்டிட முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.ஆகாயத்தாமரை அகற்றம்: விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் மாநகரத்தில் ஓடும் உய்யக்கொண்டான் ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர் வாருவதுடன் ஆகாய தாமரைகளை அகற்றி நீரோட்டம் தடையில்லாமல் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தூர் வாரும் மண்ணை அங்கிரு ந்து அப்புறப்படுத்தவேண்டும்.கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கவேண்டும் என்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் சங்கம் சார்பில் அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
NEWS FROM DINAMALAR

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் கேட்டு மத்திய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முத்தரையர் சங்கம் தீர்மானம்

திருச்சி,: கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முத்தரையர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாவட்ட தலை வர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளதால் உய்யக்கொண்டான் ஆறு மற்றும் வாய்க்கால்களை தூர்வாருவதுடன் ஆகாய தாமரைகளை அகற்றி நீரோட்டம் தடையில்லாமல் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிசி பட்டியலில் உள்ள முத்தரைய ருக்கு, 10 சதவீதம் உள் ஒதுக்கீடும், எம்பிசி பட்டியலில் உள்ள முத்தரையர்களுக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடும் வழங்கிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபரில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, மாநகரில் வழிப்பறி, செயின்பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. ஹெல் மெட் போடாதவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் போலீஸ், கொள்ளையர்களை பிடிக்க அக்கறை காட்ட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞரணி செய லாளர் பெரியகோபால், ஒன்றிய செய லாளர் விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

செய்தி தினகரன் நாளிதழிலிருந்து

 

சனி, 1 செப்டம்பர், 2012

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முத்தரையர்கள் இஸ்லாமிய கட்சியில் ...???

இராமநாதபுரம் மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட முத்தரையர் சங்கத்தினர் எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் மற்றும் பொது செயலாளர் இஷாக் முன்னிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இணைந்தனர்.
 
 
SDPI கட்சி என்பது இஸ்லாமிய மக்களுக்கான கட்சி அவர்களின் கொள்கைகளும் செயல்பாடுகளும் எல்லாமே இஸ்லாமிய மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்தில் முத்தரையர்கள் அந்த கட்சிகளில் இணைய வேண்டிய அவசியம் என்ன ? அவர்கள் கட்டாயத்தின் பெயரில் இணைக்கப் பட்டார்களா ? ராமநாதபுரம் முத்தரையர் சங்கத்தினர் இது குறித்து உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்பது இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் கோரிக்கை


எந்த கட்சிக்கோ , மதத்திற்கோ ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ செயல்படுவது எமது நோக்கம் இல்லை, முத்தரையர்களுக்கு ஆதரவான எதையும் ஆதரிப்போம், எதிரான எல்லாவற்றையும் எதிர்ப்போம்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

முத்தரையர்களின் வரலாறு - ராஜா முத்தரையர்

முத்தரசர்
39.

சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.

(க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை
ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது
கொங்கு மண்டலம் என்பதாம்.


வரலாறு : முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட
அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு
முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய
நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை
மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக
காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும்
ஆண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக்
கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு
வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள
சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக்
கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு
முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன்
மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின்
சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம்.
திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.


இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங்
காணலாம்.
(மேற்)

பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருணைச் சோறார்வர் கயவர் கருணையைப்
பேரூ மறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரு மரிதாய் விடும்.


மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
(நாலடி)

இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத்
தமிழறியும் பெருமாள் கதை என்னும் புத்தகத்தில் - 'அங்காடி
கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன்.
கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்' எனக் கூறப்பட்டுள்ளது காண்க.
கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும்
ஒரு வகுப்பினர்முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து
கொள்கிறார்கள்.


கோசர்

40.

பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச
இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்
கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்
மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங்கொங்கு மண்டலமே

(க-ரை) தமிழை ஆதரித்தவர்களும், நல்ல மனதுடையவர் களுமாகிய
கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.


வரலாறு : கோசர் என்பவர்கள் படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய
ஒரு மரபினர். இதனை "இளம்பல் கோசர் விளங்கு படை கன்மா
ரிகலினரெறிந்த வகவிலை முருக்கின், பெருமலைக் கம்பம் போலப்
பொருநற் குலையா நின்வலன்" (புறநானூறு) - மனத் தொடுபொருந்திய
மாறுபடாத சொல்லையுடையவர்கள் என்பது பொதியிற்றோன்றிய நாலூர்க்
கோசர் நன்மொழி போல வாயாகின்றது (குறுந்தொகை) என வருதல்
காண்க. இக்கோசர் கொங்கு நாட்டினை ஆண்டிருக்கிறார்கள் என்பதனைச்
"சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில்". "அது கேட்டுக் கொங்கிளங்
கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழை
தொழிலென்றும் மாறாதாயிற்று" என்பதன் உரையிலே, "அங்ஙனஞ் செழியன்
நன்மை செய்து அவை நீங்குதலின் அதனைக்கேட்டு


செய்தி உதவி : ராஜா முத்தரையர்

 

கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தல்

திருச்சி, ஆக. 27: கிளிக்கூடு- இடையாற்றுமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என முத்தரையர் வளர்ச்சி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அந்த சங்கத்தின் தலைவர் ஏ. அருணாசலம் மனு அளித்தார்.

இதேபோல, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோவில் அருகே சாலையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டது.


- தினமணி 

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

"சிந்தனை சிற்பி" - மறு பதிப்பு

சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். கா...


ஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்.
சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார். 1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
-திருமேனி


சில தினங்களுக்கு முன்பு இங்கே மரியாதைக்கு உரிய திரு. திருமேனி அவர்கள் எழுதிய செய்திக்கு திரு. வேலூர் சண்முகம் "முத்தரையர் இணையத்தில்" வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு ..
திரு சி.பி சிற்றரசு , குறித்த விவரங்கள் விளக்கமாக சில காலங்களக்கு முன்னர் நமது குழுமத்தில் பதிவிட்டிருந்தோம் ,அப்போது நண்பர்கள் அவர் நாயுடு என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி சந்தேகங்களும் எழுப்பப்பட்டது அப்போது நமது நண்பர் திரு மணிமாறன் போன்றோர் அவர் முத்தரையர் தான் முத்தரையர் சங்க நிறுவுனர் திரு வேங்கட சாமி அவர்களும் நாயுடு என்றே கூறப்பட்டார் என்பதை சுட்டி காட்டி பதிவிட்டிருந்தோம் .நிற்க தற்போது எனக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது ,மற்ற இடங்களில் பதிவு செய்யப்பட்ட பின்பு எனக்கு அனுப்ப பட்டிருந்தது அதில் அவரை பற்றிய தகவல்கள் அவரின் அரசியல் பற்றியவையும் இருந்தது ,கருணாநிதிக்கும் அவருக்கும் கருத்து வேறு பாடு காரணமாக அதிமுகவுக்கு சென்று விட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அதோடு அக்கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது .திரு .சி .பி சிற்றரசு பெயர் வேலூர் மாவட்ட ஆட்சியாளார் கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடபட்டிருந்தது .
சி.பி .சிற்றரசு மாளிகை வேலூர் - இது தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலுகம் ,பாலாற்றங்கரை ஒட்டி சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது ,இந்த அலுவலகத்தை ஒட்டி முத்தரையர் இன மக்கள் மற்றும் முதலியார் இன மக்களும் தலித்துகளும் வாழும் பகுதி ,இது மூன்றாம் நிலை நகராட்சியாக சென்ற திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு முத்தரையர் இனத்தை சார்ந்த திருமதி ,ஆர்.பி, ஜெயலக்ஷ்மி ஏழுமலை ,முதல் மற்றும் கடைசி நகராட்சி தலைவர் .இப்போது இது வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டது .திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களின் மகன் திரு ,சசிகுமார் அவர்கள் மாமன்ற உறுபினராக வெற்றி பெற்று வெற்றிகரமாக சிறப்பாக செயல் பட்டு வருகிறார் ,இவரது தந்தை திரு ,ஆர் .பி ஏழுமலை அவர்கள் திமுக ஒன்றிய செயலாளராக நீண்ட காலமாக இறுந்து வருகிறார் ,வேலூர் அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தி ,நம் மக்களக்கு முடிந்த அளவுக்கு சென்ற ஆட்சி காலத்தில் அனைத்து உதவிகளும் புரிந்தார் ,அனைத்து நல திட்டங்கள் ,இலவசங்கள் என அனைத்தும் தாராளமாக கிடைத்தது .இவரது மைத்துனர் திரு சக்கரவர்த்தி திமுக நகர செயலாளர் .
அதில் ஒரு உண்மை மறுக்கப்பட்டிருக்கிறது ,தெரிய வில்லையா அல்லது தவிர்க்கப்பட்டதா என்று தெரிய வில்லை ,அது வேலூர் ஆட்சியர் அலுவலகம் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது ,அந்த மாளிகைக்கு சி ,பி சிற்றரசு மாளிகை என்று பெயர் சூடியவரும் அவர்தான் ,அதை திறந்து வைத்தவரும் அவர்தான் என்பதை நமது நண்பர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்
உண்மையில் இங்கு வாழும் நமது இனத்து மக்களக்கு பெரும்பான்மையோருக்கு அவர் முத்தரையர் என்று தெரியாது ,எனக்கும் கூட மணிமாறன் அவர்கள் கூறிய போதுதான் தெரியும் .அதேபோல் திரு முத்தையா முரளிதரன் அவர்கள் நம்மவர் என்றும் கூறியதால் நமது இணைய தளத்திலும் போட்டிருக்கிறோம் ,ஆனால் சமிபத்தில் வேறு ஒரு இனத்தின் இணையதளம் ஒன்றை பார்க்க நேரிட்டது அதில் அவர்களும் முத்தையா முரள்தரன் அவர்களின் இனத்தை சார்ந்தவர் என்று பதிவிட்டிருக்கிரார்கள் ,நாமக்கல் நண்பரும் இதையே தான் என்னிடத்தில் கேட்டார் காரணம் முரள்தரனின் மனைவி அந்த இனத்தை சார்ந்தவர் நன்றாக தெரியும் என்றும் கூறினார் .காரணம் ஒரு நாயடு நண்பர் ஒருவர் சிற்றரசு எங்களவர் என்று என்னிடம் கூறினார் ,ஆக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியது நிறைய உள்ளது .

முத்தரையர் வளர்ச்சி சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று
நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைத்தார்.
 
முத்தரையர் வளர்ச்சி சங்கம் தலைவர் அருணாச்சலம்
அளித்த மனுவில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பொன்னுரங்கபுரம்,
திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு ஆகிய
ஊர்கள் உள்ளது. இப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் திருவானைக்காவல்,
திருச்சிக்கு செல்ல திருச்சி - சென்னை நான்கு வழி சாலையை கடந்து
செல்கின்றனர். சாலையை கடக்கும் போது அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது.
எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். கிளிக்கூடு இடையாற்று மங்கலம்
இடையே கொளளிட ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும், என
குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமுத்தரையர் புகழ் பாடும் நாலடியார் ..!!

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்;-

திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ

மூலம், ஆசாரக் கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,

முது மொழிக் காஞ்சி என்ற அற நூல்கள் 11.

திணை மாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை

எழுபது,திணைமாலை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது என்ற

அகநூல்கள் 6.

களவழி நாற்பது என்ற புற நூல் 1 ஆக மொத்தம் 18.

இவற்றுள் அகநூல்களே 11 ஆக அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் சங்க

காலத்தை ஒட்டியும், பிற்காலத்தும் எழுதப் பெற்ரவை.எனவே, இவற்றைச்

சங்க மருவிய கால நூல்கள் என்றும், நூலாசிரியர்களைப் பிற்சான்றோர்

என்றும் வழங்குவது தமிழ் இலக்கிய மரபாக உள்ளது. அற நூல்களின் காலம்

என்றே இக்காலம் கருதப்பட்டு, இலக்கிய ஆசிரியர் பலராலும்

விவரிக்கப்பட்டு வருகின்றது.

நாலடியார்;-

1. அறத்துப்பால் :- துறவற இயல், இல்லறவியல்

2. பொருட்பால் :- அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது

இயல், பகை இயல் பல்நெறி இயல்


3. காமத்துப்பால் : இன்ப துன்ப இயல், இன்ப இயல்

என்பதாக, அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்ற

முப்பால்களையும், 400 வெண்பாக்களைக் கொண்டிலங்குகின்றது.

சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்டதொரு தொகுப்பே

நாலடியார்.



"Something is better than nothing " என்பதற் கிணங்க ஒரு சிலவற்றையேனும்

மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. மிகவும் அதிகமாகப்

போனால் 4 பாடல்களைக் கீழ் வகுப்புக்களில் சிலர் படித்திருப்பர்.

7-ஆம் நூற்றாண்டின் ந்டுப்பகுதியில் சமணர்கள் கூட்டணி அமைத்து

எழுதித் தொகுத்ததே நாலடியார் என்பது அறிஞர்கள் கருத்தாகும். ,

முத்தரையர் என்ற அரசர் பரம்பரையினரைப் பற்றிய குறிப்புகள் இரு

பாடல்களில் இடம்பெற்றிருப்பதையே காரணமாகக் கூறுகின்றனர்.

அந்த இரு பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.



நாலடியார் , பொருட்பால், அரசு இயல் :20 : தாளாண்மை 200


உழைத்து உண்ணலே பேரின்பம்


. பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்

கருணைச் சோறு ஆர்வர் கயவர், கருணையைப்

பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை

நீரும் அமிழ்து ஆய்விடும்.




கருத்துரை :- இலவசமாகப் பெற்று உண்னும் விருந்து உணவைவிடத் தானே முயன்று உழைத்துக் குடிக்கும் தண்ணீர், உழைத்தவனுக்கு

அமிழ்தத்தை நிகர்த்தது ஆகும்.





தெளிவுரை- பெருமுத்தரையர் பெரிதும் மகிழ்ந்து அன்னதானம் செய்வர் அவர் வழங்கும் பொரியலுடன் கூடிய சோற்றை முயற்சி எதுவும்

செய்யாமல் கயவர் வாங்கி உண்பர். பொரிக்கறியையும் சோற்றையும்

அறியாதவராய்த் தம் அயரா உழைப்பால் தாம் முயன்று பெற்ற தண்னீர் கூட உழைப்பாளிக்கு அமிழ்தத்தை ஒத்த இன்பம் தருவதாகும்

 

நாலடியார் : நான்கு : துன்ப இயல் : 30. மானம்



யாரிடமும் யாசிக்க மாட்டார்


மமல்லல் லா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்,

நல்கூர்ந்தக் கண்னும், பெரு முத்தரையரே,

செல்வரைச் சென்று இரவாதார்.




கருத்துரை :- மற்றவர்க்கு உதவாத செல்வந்தர், செல்வந்தர் அல்லர். வறுமையிலும் செம்மை காத்து, யாரிடமும் சென்று யாசிக்காதவர்,
பெரு முத்தரையருக்கு இணையான
பெரும் புகழுடையவராவர்.




தெளிவுரை :- வளப்பம் மிக்க பெரிய உலகத்து வாழ்வோரும், மிகுந்த செல்வராக இருந்த போதிலும், ஏழைக்கு இரங்காத கொடியவர் வறியரே. வறுமையுற்ற போதும் சென்று யாரிடமும் யாசிக்காதவர் பெரும் முத்தரையருக்கு இணையான செல்வராவார்.





சிறப்புறை :- பெரும் முத்தரையரின் பெருமை இரண்டாம் முறை பேசப் படுகின்றது.



!

உதவி :- புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார் மூலம், தெளிவுரை, சிறப்புரை, கருத்து அடைவு

க.ப.அறவாணன்

தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு,
அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை
சென்னை- 600 029


தொலை பேசி :- 044-2374 4568



தமிழ் வெல்க !
 
 
News From : CLICK

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மதுவை தவிர்ப்போம்...

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும், படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.

 மதுவின் பொதுவான மூலக்கூறு "எதில் ஆல்கஹால்".

 ... பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு "எதில் ஆல்கஹால்"(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.

 1. ரம்.... 50-60%
 2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
 3. ஷெர்ரி, போர்ட்---20%
 4. ஒயின்---10-15%
 5. பீர்--4-8 %
 6. சாராயம்--40-50%

 மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது; கிளர்ச்சி நிலை (excitement): தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும். ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால் தான் உடனடி போதை ஏற்படுகிறது.

 மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில் தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும், பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா..??? என்று கவனம் இருக்காது.

 இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

 இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது; 1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.

 இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்; 1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம், 4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

 பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில் தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது. கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால் தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

 மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம், வேகம் ஆகியவை தெரியாது.

 எனவே, நண்பர்களே...!!!

 மதுவை தவிர்ப்போம்...

 சுய சிந்தனை பெறுவோம்.

--கரிகாலன் ஜெயராமன்

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

அறிவிப்பு பலகை