வெள்ளி, 26 மே, 2017

மண்மேடு மாளிகையாக போகிறது...!!!

மண்மேடு மாளிகையாக போகிறது...!!!

பேரரசுகள்களுக்கெல்லாம் காவல் தெய்வமாய் விளங்கிய சப்தகன்னியரும், பேரரசர்பெரும்பிடுகு முத்தரையரின் இஷ்ட தெய்வமாய் நின்ற நியமம் அன்னை காளப்பிடாரியும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் மண்மேடாய் நின்று நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்...!!

அந்த மணல்மேடு மாளிகையாக போகிறது...!!!!

ஆம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1342 -வது பிறந்தநாளில் திருச்சி மாநகருக்கு வருகைதந்த இந்திய நாட்டின் மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணனை தான் இருக்கும் இடத்திற்க்கே அழைத்து அன்னை காளப்பிடாரி உத்தரவிட்டிருக்கிறாள் தனக்கு ஒரு மாளிகை (கோவில்) வேண்டுமென்று...

அவரும் அதை ஏற்று, ஊர் மக்களும் முழு ஒத்துழைப்பு தருவதாக சொல்லி, பாதையமைக்க இடம் தருவதாக ஒப்புக்கொண்டு அனைத்து மக்களுக்குமான கோவில் அங்கே எழப்போகிறது.

மாணமிகு பெரும்பிடுகுவின் வாரிசுகள், அந்த புண்ணிய பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள், அந்த புண்ணிய பூமிக்கு ஒருமுறையேனும் பயணப்படுங்கள். ஆயிரம் ஆண்டுகள் செய்த பிழையை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.

அன்னை உங்களை ஆசிர்வதிப்பாள், நாடு செழிக்கும், மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்


தகவல் : டாக்டர் சந்திரசேகரன்

புதன், 24 மே, 2017

மதம் மாறாத சமுதாயம் ?

மதம் மாறாத சமுதாயம் 
மே 23ம் நாள் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளின் முன்னும், பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் மதம் மாறாத சமுதாயமாக முத்தரையர் மட்டுமே உள்ளனர். தங்கள் குலதெய்வத்திற்கு ஆகாது என்பதால் இவர்கள் மதம் மாறுவது இல்லை. கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் பகுதிகளில் இவர்களது ஆட்சி நடைபெற்றது. 'அரையர்' என்னும் சொல்லுக்கு நாடாள்வோர் என்பது பொருள். இவர்கள் பாண்டிய மன்னர்களைப் 
போல, தங்கள் கொடிகளில் மீன்களைப் பொறித்து 
வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை தங்கள் பெயர்களோடு இணைத்து வைத்திருந்தனர். 

News Source : DINAMALAR

செவ்வாய், 23 மே, 2017

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

23.05.2017 பெரும்பாட்டன் பேரரசன் பெரும்பிடுகு முத்தரையரின் பாதம் பணிந்து ஆசி பெற்ற பொன்னான தருணம்.... !








பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

23.05.2017 மங்கனங்காடு முத்தரையர் குழுமம் ஏற்பாட்டில் நடந்த முத்தரையர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது.... !



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா



நாம் தமிழர் கட்சி தலைவர் திருமிகு.சீமான் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு புகழ்வணக்கம் செலுத்தி பதிவு செய்த வீடியோ காட்சி....

இதில் பேரரசனோடு நான் இருக்கும் புகைப்படமும் இணைந்திருப்பதில் எல்லையில்லா பெருமகிழ்ச்சி....! =D =D

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

தமிழ்தேசியத்தில் வழியில் பெரும்பிடுகுவை காணும் நாம் தமிழர் சீமானாகட்டும்...

ஆன்மீகத்தின் வழியில் பெரும்பிடுகுவை காணும் பாஜக பொன்.இராதாகிருஷ்ணன் ஆகட்டும்...

எல்லாவற்றையுமே நான் ஏற்றுக்கொண்டு வழிமொழிகிறேன்.. 

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

நேற்றைய தினம் திருச்சி மாநகரில் முத்தரையர் சமூக அமைப்புகளின் எந்த கொடியையும் காணவில்லை....

மாறாக பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு பதாகையும், பாஜக கொடியுமே திருச்சி மாநகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருந்தது.

#எப்படியோ இருண்ட வரலாற்று பக்கமென்று புறந்தள்ளப்பட்ட ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு மீண்டு எழட்டும்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

மட்டற்ற மகிழ்ச்சி...!! =D

மட்டற்ற மகிழ்ச்சி...!! =D

நேற்றைய தினம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பாகமாக பல்வேறு கிராமங்களின் ஊடாக பயணப்பட நேர்ந்தது. உண்மையிலேயே மிகப்பெரிய சந்தோசமான ஒரு நாளாக நேற்றைய தினம் அமைந்துவிட்டது.

முத்தரையர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் இரவெல்லாம் கண்விழித்து காளையர்கள் கொடி, தோரணம், பதாகைகள் வைத்து அலங்கரித்து இருந்ததை காண முடிந்தது.... இன்னும் சொல்லப்போனால் தெருவெங்கும் திருவிழாவாக இருந்தது, தெருவில் கொண்டாடும் இந்த விழாவினை இன்னும் அனைத்து வீடுகளுக்குள்ளும் கொண்டு சேர்க்க வேண்டும்.

நிச்சயமாக நம்முடைய கிராமத்து இளம் சிங்கங்களுக்கு பெரும் அரசியலின் தாக்கம் எதுவுமே இல்லை, அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளோ, முரண்பாடுகளோ இல்லை என்பதற்க்கு உதாரணம் சமூக அமைப்புகளின் பரம வைரிகள் என்று சொல்லப்படும் அய்யா ஆர்.வியும், கே.கே.செல்வகுமாரும் ஒரே பதாகைகளில் சிரித்துக்கொண்டே நிற்கிறார்கள், (இடையிடையே சில பதாகைகளில் நானும்கூட :) )

திருச்சி மாநகர காவல்துறையினருக்கு நம் பேரரசர் மீது இவ்வளவு மரியாதை இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை நான் கூட தூங்கி எழுந்து ஒன்பது மணிக்குதான் பேரரசரின் சிலைக்கு அருகே சென்று ஆசிப்பெற்றேன், ஆனால் திருச்சி மாநகர காவல்துறையோ முதல்நாள் இரவிலிருந்தே காத்திருந்து பேரரசரை வணங்கி இருப்பார்கள் போல... :pஆயிரக்கணக்கில் காவல்துறை குவிக்கப்பட்டு முத்தரையர் இளைஞர்கள் அணிதிரண்டு வருவார்களா ? என்று இங்கே திருச்சியில் காத்திருந்த அந்த நேரத்தில் கிராமத்தின் தெருக்களின் எம் பேரரசரின் பிறந்தநாள் எத்தனையோ உற்சாகமாக கொண்டாடப்பட்டுக்கொன்டு இருந்தது..

இன்னும் பாஜக, நாம் தமிழர் போன்ற அமைப்புகள் அவர்கள் விழாவாகவே இதனை நடத்தியதும், அனைத்து அரசியல் அமைப்பினரும் வருகை தந்து சிறப்பித்ததும் மட்டற்ற மகிழ்ச்சியே...!

வழக்கம்போலவே எதாவது ஒரு குறையை சுட்டிக்காட்டுவேன் என்று இவ்வளவு தூரம் வாசித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் :P

#குறையொன்றுமில்லை....

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் எல்லா தலைவர்களின் பிறந்தநாள் அன்றும் அரசு சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்படுவது வழக்கம் எமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரை தவிர...!
இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் ? ஒருவேளை விளம்பரம் கொடுக்க காசு இல்லாமல் இருப்பாரோ தமிழக முதலமைச்சர் ?
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் முடிந்தால் தமிழக முதலமைச்சர் பெயரில் ஒரு ரூபாய்க்கு மணியார்டரோ,DD-யோ, அல்லது செக்கில் எழுதியோ தமிழக அரசுக்கு ஒவ்வொரு முத்தரையரும் அனுப்பி அனுப்பிய நகலோடு இந்த தொகையை எதிர்காலத்தில் முத்தரையர் பிறந்தநாள் அன்று தினசரிகளின் விளம்பரம் கொடுக்க வைத்துக்கொள்ளும்படியும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல ஒரு ரூபாய் அனுப்பிவிடுவதாகவும் கடிதமும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். =D
கா.சஞ்சய்காந்தி அம்பலகாரர்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா




அரசாங்கம் சொல்லுது "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா" அப்படின்னு...
ஆனா இங்க நிறையபேரு இன்னும் "சதயவிழா" சொல்றத நிறுத்தவுமில்லை, அதற்க்கு விளக்கமும் சொல்லவில்லை... :P
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

இந்த முட்டல்மோதல்கள் நல்லதுக்குதானா...?

திருச்சி : திருச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்ற, பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1342வது சதய விழா அரசு சார்பில்  நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள  முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள், அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனை விமானநிலையத்திலிருந்து வரவேற்க வீரமுத்தரையர்  முன்னேற்ற சங்க மாநில தலைவர் செல்வகுமாரை பாஜகவினர் அழைத்துச்சென்றனர். அமைச்சருடன் அவர் முத்தரையர் சிலைக்கு வந்தார். அப்போது பாஜக முன்னாள்  மாவட்ட தலைவர் பார்த்திபன், அங்கு காத்திருந்த தமிழ்நாடு முத்தரையர் சங்க  (ஆர்.விஸ்வநாதன் ஆதரவாளர்) நிர்வாகிகளிடம் அமைச்சர் வருகிறார், சேர்ந்து செல்லலாம் என  கூறி உள்ளார். இதற்கு, தமிழ்நாடு  முத்தரையர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரும்  ஆவேசமாக கூச்சலிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

சிலை அருகே பொன்.ராதாகிருஷ்ணன் வந்தபோது, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்  பத்திரிகையாளர்களுக்கு மேடையின்கீழே நின்று  பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் பொன்.ராதாகிருஷ்ணன் பேரிகார்டு பக்கத்தில் சுமார் 20 நிமிடம் காத்திருந்தார். அவருடன் வந்தவர்களும் கூட்ட நெரிசலில் முட்டி மோதியபடி நின்றதால் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிைடயே, சீமான் சென்றதும், பொன்.ராதாகிருஷ்ணன் கன்டோன்மென்ட் போலீசாரை பார்த்து ‘என்ன ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள்?  நாங்கள் 20 நிமிடமாக காத்திருக்கிறது தெரியாதா? பேட்டி என்றால் வேறு  பகுதியில் போய் கொடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறலாமே? இதனால் தேவையில்லாத  பிரச்னை ஏற்பட இருந்ததை பார்த்தீர்களா? ’ என  கூறி கடிந்துகொண்டார்.




இந்த முட்டல்மோதல்கள் நல்லதுக்குதானா...? 

செவ்வாய், 16 மே, 2017

கண்தானத்துக்கு முன்னோடி கண்ணப்ப நாயனார்

//கண்தானத்துக்கு முன்னோடி கண்ணப்ப நாயனார்:
கண்ணப்ப நாயனாரது கதை ‘கண் தானத்தை’ வலியுறுத்துகிறது. திருக்காளத்தி (தற்போதைய காளஹஸ்திதான்) மலையிலுள்ள சிவலிங்கத்தை வணங்கி, வந்த திண்ணனார், அச்சிவலிங்கத்தின் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து அக்குறையைத் தீர்க்கும் மருந்தாகத் தனது கண்ணை எடுத்து அச்சிவலிங்கத்தின் கண்ணில் அப்பினார் (பொருத்தினார்). இது கண்மாற்று அறுவை சிகிச்சையைப் போல் அல்லவா இருக்கிறது? அன்றுமுதல் அவர் கண்ணப்ப நாயனார் ஆனார் என அவரது கதை கூறுகிறது. ‘ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்க்கும்' எனத் தமிழ் வழக்கில் ஒரு பழமொழியும் உண்டு. கண்ணப்பநாயனார் செய்தது உடல் உறுப்புத் தானமல்லவா! கண் தானத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடியல்லவா அவர். //

Read More News : VIKADAN