Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

புதன், 26 பிப்ரவரி, 2014

பெரம்பலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர்









பெரம்பலூர்: நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் லோக்சபா போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி. மருதைராஜ் என்கிற ஆர்.பி. மருதராஜா (வயது50), பெரம்பலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர். 7.3.1963-ல் பிறந்த ஆர்.பி. மருதராஜாவின் பெற்றோர் எஸ்.பெரியசாமி கமலம். மிராசுதாரான பெரியசாமி மரணமடைந்துவிட்டார். ஆர்.பி. மருதராஜா ரங்கநாதபுரம், பாளையம், குரும்பலூர் பகுதிகளில் தொடக்கக்கல்வியும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியும் பயின்று திருச்சி தேசியக்கல்லூரியில் 1981-1986 வரை எம்.எஸ்.சி. (அப்ளைடு ஜியாலஜி) பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகாலமாக அதிமுகவிலேயே இருக்கிறார். மிராசுதாராக பிறந்து பெரம்பலூர் எம்.பி வேட்பாளரான மருதராஜா ஆர்.பி. மருதராஜாவின் மனைவி ம.கலைச்செல்வி. பி.எஸ்.சி. பட்டதாரி. இவர்களுக்கு பிரசன்னகுமார் (11-ஆம் வகுப்பு) என்ற மகனும், சுவாதிபிரியா (10ஆம் வகுப்பு) மகளும் உள்ளனர். மாணவப்பருவத்தில்.... 1980-ஆம் ஆண்டில் மாணவப்பருவத்திலேயே அ.தி.மு.க.வில் இணைந்த மருதராஜா, 1986 முதல் 1994 வரை பெரம்பலூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளராகவும், 1994 முதல் 2006 வரை பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஆகவும் பதவி வகித்துள்ளார். ஒன்றியக் கவுன்சிலர் 2004 முதல் பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளராக பொறுப்பில் உள்ள மருதராஜா, 2011-ல் நடந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரம்பலூர் ஒன்றியக்குழுத்தலைவராக பதவிவகித்துவருகிறார். விவசாயக்குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுவந்தாலும், முழுநேரமும் கட்சிப்பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். கட்சித்தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி காட்டும் திறமைபெற்றவர் என்ற பெயர் அதிமுகவினரிடையே உள்ளது. பெரம்பலூர் கல்யாண் நகரில் குடும்பத்துடன் வசித்துவரும் ஆர்.பி. மருதராஜா, கட்சியின் சக தொண்டர்களுடன் அன்பாக பழகக்கூடியவர் என்ற நற்பெயரும் உள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பும் அதிகம் என்கின்றனர் அதிமுகவினர்

News Source : தமிழ் ஒன் இந்தியா

படம் : நக்கீரன் 

தமிழக அரசே கவனம்




தேவேந்திரகுல வேளாளர்களே இது என்ன அபத்தம்..? ஏன் இப்படி மாறிப்போய்விட்டீர்கள்..? நீங்கள் வீரர் மரபை சார்ந்தவர்கள் என்றல்லவா எண்ணினோம்..? எங்களின் உயிராய், உணர்வாய் வீற்றிருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மாதிரியை இப்படி தவறாக பயன்படுத்தலாமா..? மாவீரர் சுந்தரலிங்கனார் ஒரு பெரும் போர்வீரனாய் இருக்கும்போது, அவருக்கென்று ஒரு மாதிரி இருக்கும்போது ஏன் இந்த அபத்தம்..? தேவேந்திரகுல தலைவர்கள் யாருமே இந்த சிலையை பார்க்கவில்லையா..? இது தவறான செயல் என்று சொல்லவில்லையா..?

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இந்த விசயத்தில் அமைதியான தீர்வினை காணவேண்டும், அல்லது இது தேவையற்ற புதிய பிரச்சனையை இரு சமூகங்களுக்கிடையே ஏற்படுத்திவிடும்.

 தேவை உடனடியான நடவடிக்கை...!!

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

முதல் வெற்றி...!!




முதல் வெற்றி...!!

      இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் முதன்முதலாக தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து அதிரடியாக களம் இறங்கியது நண்பர்கள் அறிந்ததுதான், இதுவரை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுப்போடுவதை தவிர வேறு எந்த முன்னெடுப்புக்களையும் செய்யாத "முத்தரையர் சமூதாயத்திற்க்கு அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுதான் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் பிரதான நோக்கம், அடுத்ததாக அரசியல்கட்சிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதும் நமது நோக்கமாக இருந்தது, இந்த விவரங்களையெல்லாம் நாம் வேட்பாளரை அறிவித்தபோதே தெளிவாக அறிவித்துவிட்டோம்.
     
    இந்த நிலையில் நம்முடைய முதல் வெற்றியாக இதுவரை இந்த தொகுதின் முக்கியத்துவத்தை அறியாமல், அல்லது கண்டும் காணாமலும் இருந்த நம்முடைய சங்கங்களில் இரண்டு பிரதான சங்கங்கள் சார்பில் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து ஒருவரும், பேராவூரணி பகுதியில் இருந்து முக்கியமான ஒருவரும், வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்க்கான வாய்ப்புகளும், அதேபோல  நம்முடைய சமுதாயத்தை இலக்காக கொண்டு இயங்கும் இரண்டு அரசியல் கட்சிகளின் சார்பில் மன்னார்குடி பகுதியிலிருந்து ஒருவரும், ஒரத்தநாடு பகுதியிலிருந்து ஒருவரும் வேட்பாளராக்கப்படும் வாய்ப்புகளும், அதே போல கடந்த சில தேர்தல் களங்களில் போதிய பிரச்சாரமோ, அறிமுகமோ இல்லாமல் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், இவையெல்லாவற்றிற்க்கும் மேலாக அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள ஒரு தேசிய கட்சியின் சார்பில் ஒருவர் வேட்பாளராக்கப்படக்கூடும் என்ற பலத்த எதிர்பார்ப்பும் உண்டு, இவர்களெல்லாம் போட்டியிடுவதற்க்கான ஆயத்தத்தில் ஈடுபட்டிருப்பது பொதுப்பார்வையில் நமக்கு வருத்தத்தை தந்திருக்க வேண்டும், ஆனால் இது, இந்த விழிப்புணர்வு நமக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது, இதைதான், இந்த விழிப்புணர்வைதான் நம்முடைய பிரதான நோக்கமாக கொண்டிருந்தோம், அதன் முதல்கட்டத்தில் நாம் வெற்றியடைந்திருக்கிறோம்.
     
   அதே நேரத்தில் வழக்கமாக தேர்தல்காலங்களில் இதுபோல பரபரப்பிற்க்காகவோ, ஆதாயம் அடையும் நோக்கத்திற்க்காகவோ நம்மில் சிலர் இதுபோல அறிவிப்பது நாம் அறிந்ததுதான், அதனால் இந்த விழிப்புணர்வினை வரவேற்க்கும் அதே நேரம், இந்த விழிப்புணர்வினை யாரும் ஆதாயத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதால் நாமும் களத்திலேயே இருக்கிறோம், இப்போது நம்முடைய வேட்பாளரை தவிர்த்து போட்டியிடக்கூடும் என் எதிர்பார்க்கப்படும் ஐந்து அல்லது ஆறு வேட்பாளர்களில் யாரெல்லாம் கடைசிவரை போட்டியில் இருக்கிறார்கள், யாரெல்லாம் உண்மையான சமூக அக்கறையில் போட்டியிடுகிறார்கள், என்று முழுமையான கண்காணிப்பின் இறுதியில் நமக்கு திருப்திதரும் வகையில் போட்டியில் உறுதியாக இருப்பவர் யார் என்பதை கவனித்து அவசியம் ஏற்படுமேயானால் நம்முடைய வேட்பாளரை விலக்கி கொண்டு நம்முடைய ஆதரவினை தர நாம் தயாராக இருக்கிறோம், அதேபோல எந்த அரசியல் கட்சியும் வேட்பாளரை அறிவிக்குமானால் நிபந்தனையின்றி நாம் போட்டியிலிருந்து விலகிவிடுவோம்.
   
   இது தவிர்த்து வேறு எந்த அச்சுறுத்தல்களுக்கோ, அல்லது இனத்தை அடகு வைத்துவிட்டோ நாம் போட்டியிலிருந்து விலகப்போவதில்லை என்பதை உறுதியோடு அறிவித்துக்கொள்கிறோம்.  
முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே...

அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சனி, 15 பிப்ரவரி, 2014

வாராஹி மர்மம்










தஞ்சாவூர் பெரிய கோயிலில்வாராஹி அம்மனுக்கு ஒரு சன்னிதி இருக்கிறது. இதைப்பற்றிய சில மர்மமான, விசித்திரமான் செய்திகளை மறைந்த மேதை டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன் கூறினார்.

பெரிய கோயில் என்று இப்போது சாதாரணமாக அழைக்கப்படும் பெருவுடையார் அல்லது பிரஹதீஸ்வரர் கோயில், ராஜராஜ சோழரால்
கட்டப்பட்டது. 1012ஆம் ஆண்டில் இது திருக்குடமுழுக்குப் பெற்றது. ஆனால் அங்கு இருக்கும் வாராஹி தேவியின் திருஉரு அந்தக் கோயிலுக்கும் முந்தி உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தது. அந்த தேவியின் மூர்த்தம் எப்படியும் 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் உள்ளதாக இருக்கலாம்.

அந்தக்காலகட்டங்களில் வாராஹி, நிசும்பசூதினி, மகிஷாசுரமர்த்தி, வைஷ்ணவி, சப்தமாத்ருகா, போன்ற தெய்வங்களின் வழிபாடு செல்வாக்குடன் விளங்கியது. பல அரசபரம்பரையினருக்குக் குலதெய்வமாக விளங்கினர்.ஆகவே, பெருவுடையார் கோயிலுக்கும் முற்பட்டே அந்த வாராஹி தேவியின் உரு இருந்திருக்கிறது.

தேவார காலத்திலேயே 'தஞ்சைத் தளிக்குளத்தார்' என்னும் கோயில் ஒன்று தஞ்சாவூரில் இருந்திருக்கிறது. அது எந்த இடத்தில் இருந்தது என்பது அறியப்படவில்லை. ஆனால் பெருவுடையார் கோயில் கட்டப்பட்டப்பின்னர் அந்தக்கோயிலின் பிரஸ்தாபமே இல்லை.

ஆகவே தஞ்சைத்தளிக்குளத்தார்கோயிலின்இருப்பிடத்திலேயே பெருவுடையார் கோயில் எழுப்பப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இருக்கலாம்.
அந்த வாராஹியும் அந்தக் கோயிலில் ஏற்கனவே இருந்ததாகக்கூட இருக்கலாம். சோழர்கள் தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், அந்தப் பக்கங்களில் முத்தரையர் போன்றோர் இருந்திருக்கின்றனர். முத்தரையர், பாண்டியர் போன்றோர் வாராஹி போன்ற தேவியரை வணங்கியவர்கள்.

ஆக, தஞ்சை வாராஹி, பழமையானவள். எங்கிருந்து வந்தாள்? தெரியாது. எங்கிருந்தோ வந்தவள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வாராஹி தேவிக்கு மண்டபம் ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். அதற்குக் கும்பாபிஷேகமும் செய்ய எண்ணியிருந்தார்கள். தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜசோழன் சிலை வைக்கவேண்டும் என்று கருணாநிதி 1975-வாக்கில் நடவடிக்கைகள் எடுத்தார். அது மத்திய அரசு/ தொல்பொருள்துறையினர் ஆகியோருக்கும் தமிழக அரசுக்கும்
இடையே பெரிய பிரச்னை ஆகியது. அக்கோயில், தொல்பொருள் சின்னமாக விளங்கியதால் அதில் புதிய நிர்மாணங்கள் எதையும் நிறுவ சட்டத்தில் இடமில்லை என்று வாதிக்கப்பட்டது.

'ராஜராஜ சோழனின் சிலையை வைக்கக்கூடாது; ஆனால் வாராஹிக்கு மட்டும் புதிதாக மண்டபம்கட்டலாமா?' என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

ஆகவே வாராஹியின்மண்டபத்தை இடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அதே தேதியில், தி.மு.க.அரசு, மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சில மாதங்களில் எமெர்ஜென்சி, தேர்தல் போன்றவை வந்து, இந்திரா காந்தியும் தோற்றுப்போனார்.

ராஜராஜ சோழர், ஏதோ ஓர் ஆண்டில் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் 985-ஆம் ஆண்டில் பட்டத்துக்கு வந்தார். ஆனால் எந்தத் தேதியில் அவர் பட்டதுக்கு வந்தார் என்பது அறியப்படவில்லை.

பெருவுடையார் கோயிலில் ஐப்பசி சதயந்தோறும் ராஜராஜசோழரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. 1983-ஆம் ஆண்டு இன்னொரு விபரீதம் நடந்தது. அப்போதிருந்த தமிழக அரசு, ராஜராஜசோழரின் முடிசூட்டின் ஆயிரமாவது ஆண்டுவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது. ஆனால் உண்மையிலேயே அது 998-ஆம் ஆண்டுவிழாதான்.

ராஜராஜசோழரின் செப்புச்சிலைக்குப் பொது இடத்தில் முடிசூட்டுவிழாச் செய்ய ஏற்பாடாகியது. அது இன்னொரு பிரச்னையாக உருவாகியது. முடிவில் தெய்வ சன்னிதியிலேயே அவ்விழாவைக் கொண்டாடுவது என்று முடிவாகியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் கையால் முடிசூட்டுவது என்று முடிவு செய்தார்கள்.

அதன்படியே செய்யப்பட்ட முடிசூட்டுவிழாவின் போது, அப்போதிருந்த முதலமைச்சர் எம்ஜியார், முதன் முறையாக மயக்கமடைந்தார். கோயில் வாசலில் அது நிகழ்ந்தது. அதன்பின்னர் சில நாட்களில் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அதனை அடுத்து பிரதமர் இந்திரா காந்தியும் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டு ஐப்பசி சதயத் திருவிழாவும் நடைபெறவில்லை. அநத ஐப்பசி சதயத்தன்றுதான் இந்திரா காந்தியின் அந்திம யாத்திரை நடைபெற்றது.

News Source: http://kaumarapayanam.blogspot.ae/2014/02/blog-post_7974.html

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு



வீட்டுமனைப் பட்டா கேட்டு சிவகங்கை சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சோ. தனபாலிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள செஞ்சை பகுதியில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 

  கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு குடியிருக்க சொந்தமான வீட்டுமனையோ, நிலமோ இல்லை. ஒரே வீட்டில் 2,3 குடும்பங்களாக வாழ்ந்து வருகிறோம்.

 எனவே எங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். 

 இந்நிகழ்ச்சியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்குடி நகரச செயலர் சீனிவாசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் சிவாஜிகாந்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

News Source : DINAMANI