Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வியாழன், 7 மார்ச், 2013

சாண்டில்யனின் "மோகனச்சிலை" - ஒரு பார்வை





 1300 - வருடங்களுக்கு முந்தைய கதைக்களம் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவலை தம்பி ஒருவர் எனக்கு பரிந்துரைத்தப் போது எனக்கு அவ்வளவு ஆர்வமில்லாமல் படிக்கத் துவங்கி நாவலாசிரியர்திருசாண்டில்யனின் முன்னுரையிலும்அதைத் தொடர்ந்த கதையின் தொடக்கத்திலும் "முத்தரையர்கள்குறித்த தவறான சித்தரிப்புக்கள்முத்தரையனான எனக்கு இயற்க்கையாய் எழும் கோபம்கதையின் போக்கில் எரிச்சலுடனேயே பயணப் பட வைத்தது,

 "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்பற்றிய அத்தியாயம் தொடங்கும்போது எரிச்சல் அடங்கி ஆர்வம் மிகுந்ததுநாவலாசிரியர் என்னதான் "முத்தரையர்கள்ஆண்ட காலத்தை இருண்ட காலம் என்றும்துன்பம் நிறைந்தது என்றும் காண்பிக்க நினைத்தாலும்முத்தரையர்களின் வீரத்தினைநேர்மையினைஎதிரிகளிடம் காட்டும் இரக்கத்தினைதுரோகத்தை துரோகத்தால் இல்லாமல் வீரத்தால் வெல்ல நினைக்கும் உறுதி என்று முத்தரையர்களின் இயற்க்கை குணத்தினை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

உலகம் வியக்கும், யாருக்கும் தலை வணங்காத வீரம் கொண்ட "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" தனது வளர்ப்பு மகளிடம் காட்டும் பாசமும், அந்த அபலைப் பெண்ணின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் விதமும், கற்பனைதான் என்றாலும் "முத்தரையர்களின்" பாசமும், வீரமும் உலகம் வியக்கும் உண்மைகள் என்பதை நாவலாசிரியர் உரக்கச் சொல்கிறார்.

        வீரத்தின் இலக்கணமாய் வாழ்ந்த "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்குறித்த தகவல்கள் / வரலாறுகள் வஞ்சகர்களால் மறைக்கப் பட்டும்கூட நாவலாசிரியர் மரியாதைக்குறிய "சாண்டில்யன்உண்மையை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்பட்டது நிச்சயமாக அவருக்கு நாம் கடமைப் பட்டவர்கள் ஆகின்றோம்.

         இது இனத்தின் மீது ஆர்வமில்லாமல் இருக்கும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய பல தகவல்கள் அடங்கிய நூல் ஆதலால் எனது மதிப்பிற்க்கு உரிய உறவுகளிடம் நான் வேண்டுவதுயாருக்கேனும் ( நமது சமூகத்தவர்களுக்குநீங்கள் பரிசளிக்க விரும்பினால் நிச்சயமாக "சாண்டில்யனின் மோகனச்சிலை" புத்தகத்தினை பரிசளித்து வரலாற்றினை அறிய செய்யுங்கள்இந்த நூல் ரூபாய் . 120 / - விலையில்  " வானதி பதிப்பகம், 23, தீனதயாலு தெருதியாகராய நகர்சென்னை - 600 017 " என்ற முகவரியில் கிடைக்கும்இந்த புத்தகத்தினை இலவசமாக படிக்க (CLICK) இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்பதிவிறக்கம் செய்ய முடியாவிட்டால் sanjai28582@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் PDF வடிவத்தில் அனுப்பியும் தருகிறேன்.

        நிறைய நமது உறவுகளுக்கு வரலாறு தெரியாமையால் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கின்றார்கள்நிச்சயமாக இந்த நூல் நம்மினத்தவரின் தாழ்வு மனப்பான்மையை இல்லாமல் செய்துநெஞ்சம் நிமிர்த்திகர்வத்தோடு "முத்தரையர்என்று சொல்ல வைக்கும்.

என்றும் சமூகப் பணியில்.....
 சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்,


குறிப்பு : இந்த வலைத்தளத்தில் வெளியிடப்படும் எந்த தகவலினையும் எடுத்து வெளியிடும் நண்பர்கள் இது http://illamsingam.blogspot.ae இந்த வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்புடன் வெளியிட வேண்டுகிறோம்நன்றி...!

3 கருத்துகள்:

நிறம் மாறாத உறவுகள் - தொலைக்காட்சி தொடர் சொன்னது…

இன்னும் பல நாவல்கள் நமது முத்தரைய மன்னனைப் பற்றி உள்ளன. கவுதம நீலாம்பரன், சாண்டில்யன்,தாமரை செந்தூர் பாண்டி ஆகியோர் எழுதி உள்ளனர்.

Alangaijayaram சொன்னது…

போன வாரம் கோவை சென்றபோது, மோகனசிலை நாவலை தேடினேன் கிடைக்கவில்லை, அடுத்த வாரம் கட்டாயமாக வாங்கி வருவேன். படித்துவிட்டு வீரவரலாற்று பதிவுகளை இடுவோம்.

Alangaijayaram சொன்னது…

புத்தகத்தின் பெயரையும் கூறினாள் வாங்க ஏதுவாக இருக்கும்.