Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பெருமுத்தரையர் புகழ் பாடும் நாலடியார் ..!!

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்;-

திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ

மூலம், ஆசாரக் கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,

முது மொழிக் காஞ்சி என்ற அற நூல்கள் 11.

திணை மாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை

எழுபது,திணைமாலை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது என்ற

அகநூல்கள் 6.

களவழி நாற்பது என்ற புற நூல் 1 ஆக மொத்தம் 18.

இவற்றுள் அகநூல்களே 11 ஆக அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் சங்க

காலத்தை ஒட்டியும், பிற்காலத்தும் எழுதப் பெற்ரவை.எனவே, இவற்றைச்

சங்க மருவிய கால நூல்கள் என்றும், நூலாசிரியர்களைப் பிற்சான்றோர்

என்றும் வழங்குவது தமிழ் இலக்கிய மரபாக உள்ளது. அற நூல்களின் காலம்

என்றே இக்காலம் கருதப்பட்டு, இலக்கிய ஆசிரியர் பலராலும்

விவரிக்கப்பட்டு வருகின்றது.

நாலடியார்;-

1. அறத்துப்பால் :- துறவற இயல், இல்லறவியல்

2. பொருட்பால் :- அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது

இயல், பகை இயல் பல்நெறி இயல்


3. காமத்துப்பால் : இன்ப துன்ப இயல், இன்ப இயல்

என்பதாக, அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்ற

முப்பால்களையும், 400 வெண்பாக்களைக் கொண்டிலங்குகின்றது.

சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்டதொரு தொகுப்பே

நாலடியார்.



"Something is better than nothing " என்பதற் கிணங்க ஒரு சிலவற்றையேனும்

மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. மிகவும் அதிகமாகப்

போனால் 4 பாடல்களைக் கீழ் வகுப்புக்களில் சிலர் படித்திருப்பர்.

7-ஆம் நூற்றாண்டின் ந்டுப்பகுதியில் சமணர்கள் கூட்டணி அமைத்து

எழுதித் தொகுத்ததே நாலடியார் என்பது அறிஞர்கள் கருத்தாகும். ,

முத்தரையர் என்ற அரசர் பரம்பரையினரைப் பற்றிய குறிப்புகள் இரு

பாடல்களில் இடம்பெற்றிருப்பதையே காரணமாகக் கூறுகின்றனர்.

அந்த இரு பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.



நாலடியார் , பொருட்பால், அரசு இயல் :20 : தாளாண்மை 200


உழைத்து உண்ணலே பேரின்பம்


. பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்

கருணைச் சோறு ஆர்வர் கயவர், கருணையைப்

பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை

நீரும் அமிழ்து ஆய்விடும்.




கருத்துரை :- இலவசமாகப் பெற்று உண்னும் விருந்து உணவைவிடத் தானே முயன்று உழைத்துக் குடிக்கும் தண்ணீர், உழைத்தவனுக்கு

அமிழ்தத்தை நிகர்த்தது ஆகும்.





தெளிவுரை- பெருமுத்தரையர் பெரிதும் மகிழ்ந்து அன்னதானம் செய்வர் அவர் வழங்கும் பொரியலுடன் கூடிய சோற்றை முயற்சி எதுவும்

செய்யாமல் கயவர் வாங்கி உண்பர். பொரிக்கறியையும் சோற்றையும்

அறியாதவராய்த் தம் அயரா உழைப்பால் தாம் முயன்று பெற்ற தண்னீர் கூட உழைப்பாளிக்கு அமிழ்தத்தை ஒத்த இன்பம் தருவதாகும்

 

நாலடியார் : நான்கு : துன்ப இயல் : 30. மானம்



யாரிடமும் யாசிக்க மாட்டார்


மமல்லல் லா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்

செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்,

நல்கூர்ந்தக் கண்னும், பெரு முத்தரையரே,

செல்வரைச் சென்று இரவாதார்.




கருத்துரை :- மற்றவர்க்கு உதவாத செல்வந்தர், செல்வந்தர் அல்லர். வறுமையிலும் செம்மை காத்து, யாரிடமும் சென்று யாசிக்காதவர்,
பெரு முத்தரையருக்கு இணையான
பெரும் புகழுடையவராவர்.




தெளிவுரை :- வளப்பம் மிக்க பெரிய உலகத்து வாழ்வோரும், மிகுந்த செல்வராக இருந்த போதிலும், ஏழைக்கு இரங்காத கொடியவர் வறியரே. வறுமையுற்ற போதும் சென்று யாரிடமும் யாசிக்காதவர் பெரும் முத்தரையருக்கு இணையான செல்வராவார்.





சிறப்புறை :- பெரும் முத்தரையரின் பெருமை இரண்டாம் முறை பேசப் படுகின்றது.



!

உதவி :- புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார் மூலம், தெளிவுரை, சிறப்புரை, கருத்து அடைவு

க.ப.அறவாணன்

தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு,
அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை
சென்னை- 600 029


தொலை பேசி :- 044-2374 4568



தமிழ் வெல்க !
 
 
News From : CLICK

கருத்துகள் இல்லை: